மருத்துவரான தந்தையை கொன்று கொடூரமாக சிதைத்த மகன்: சகோதரியால் வெளிவந்த உண்மை
அமெரிக்காவின் மிச்சிகன் மகாணத்தில் மருத்துவரான தந்தையை சொந்த மகனே கொன்று கொடூரமாக சிதைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாகாணம் முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் 56 வயதான நபரை ஒரு வாரத்திற்கு பின்னர் கைது செய்துள்ளனர்.
மிச்சிகன் மாகாணத்தில் பல் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் 82 வயதான Thomas Aye. இவரே உடல் சிதைக்கப்பட்ட நிலையில் தமது குடியிருப்பில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
ஜூலை 25ம் திகதி சுமார் 7 மணியளவில் மருத்துவரின் மகள் தந்தையை காண சென்ற நிலையில், அவர் கொல்லப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் 56 வயதான Scott Sterffy என்பவரை கைது செய்துள்ளனர்.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள Scott Sterffy, தமது தந்தையை கொல்லவில்லை எனவும், தமது வாழ்க்கையில் ஒருவரை கூட தாம் கொல்லவில்லை எனவும், உடல் சிதைத்தது இல்லை எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் பொலிஸ் தரப்பில், கொலை நடந்த வேளையில் Scott Sterffy சம்பவ இடத்தில் இருந்துள்ளார் எனவும், அதே குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கொலையில் அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது தெளிவாகவில்லை என்றே பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.