பட்டப்பகலில் நடுங்க வைத்த சம்பவம்: வழிபோக்கர் ஒருவரால் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்
அயர்லாந்தில் ஜாகிங் சென்ற போது வழிபோக்கர் ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளம் ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு பொதுமக்களும் நண்பர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆரம்ப பள்ளி ஆசிரியரான 23 வயது Ashling Murphy புதன்கிழமை ஜாகிங் சென்ற நிலையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் அவரது சமூக மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு மாயமான அந்த மர்ம நபரை கைது செய்தே தீருவோம் என விசாரணை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பில் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகாமையில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட ஆசிரியருக்கும் கைதான நபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை பொலிசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தனியாக ஜாகிங் சென்ற ஆசிரியரை அந்த நபர் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். ஆனால் இருவருமே அறிமுகமில்லாதவர்கள் என்பதால், விசாரணை அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், குறித்த கொலை சம்பவத்தை அப்பகுதி மக்கள் பார்த்திருக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்தவ்ழக்கின் தன்மை கருதி அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.