அண்ணியை உயிரோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ஜாமினில் வெளிவந்த 'கொலைகாரன்'! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி
சமையல் சிலிண்டரை திருட முயன்றபோது தடுக்க வந்த அண்ணியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த ஜாமினில் வெளிவந்த கொலைகாரனனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக மாவட்டம் கோவையில் உள்ள சரவணம்பட்டியில் லட்சுமி நகர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட கே. குமரவேல் (32), 2019-ல் அவரது தந்தை கிருஷ்ணனை கொலை செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், அவர் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு, அவர் தனது சகோதரர் சக்திவேலின் வீட்டில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது சக்திவேலும் அவரது மனைவியும் அவரைக் கவனித்து திருட்டைத் தடுக்க முயன்றனர். இதனால் கடுப்பான குமாரவேல் ஒரு வாகனத்திலிருந்து பெட்ரோல் எடுத்துவந்து, தனது அண்ணியின் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அந்தப் பெண்ணுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி செய்ததாக குமாரவேல் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.