உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை சட்னி: எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், முருங்கைக்கீரையை பயன்படுத்தி முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 15
- முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
- தக்காளி- 1
- சீரகம்- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி விதை- ½ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- புளி- சிறிதளவு
- கடுகு- ½ ஸ்பூன்
- உளுந்து- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முருங்கைக்கீரை சேர்த்து 2 முறை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சீரகம், கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கி, முருங்கைக்கீரை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இதில் காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி எடுத்து ஆறவைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஆறவைத்த பொருட்கள், உப்பு, புளி சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக, வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் முருங்கைக்கீரை சட்னி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |