உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை இடியாப்பம்.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளை தினமும் உணவில் எடுத்துக்கொண்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
இதுமட்டுமில்லாமல் முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அந்தவகையில், உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 கப்
- முருங்கை கீரை- 1 கைப்பிடி
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் முருங்கை கீரையை 2- 3 முறை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து முருங்கை கீரையை வதக்கி எடுத்து மிக்ஸியில் தஹன்னேர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துகொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.

இதற்கடுத்து இந்த மாவில் அரைத்த முடக்கத்தான் கீரை சாறு சேர்த்து நன்கு பிணைந்துகொள்ளவும்.
பின்னர் இதில் சுடுதண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக இந்த மாவை இடியாப்பம் போல் பிழிந்து 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான முடக்கத்தான் கீரை இடியாப்பம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |