நாவூறும் சுவையில் காளான் தொன்னை பிரியாணி.., எப்படி செய்வது?
காளான் பிரியாணி என்பது தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான உணவு ஆகும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காளான்- 2 கப்
- தயிர்- ½ கப்
- மஞ்சள் தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- புதினா- 1 கைப்பிடி
- இஞ்சி- 2 துண்டு
- பூண்டு- 5 பல்
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- நெய்- 2 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- பிரிஞ்சி இலை- 1
- பட்டை- 2
- ஏலக்காய்- 3
- சோம்பு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 2
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- பிரியாணி மசாலா- 1 ஸ்பூன்
- கரி மசாலா- ½ ஸ்பூன்
- மிளகு தூள்- ½ ஸ்பூன்
- எலுமிச்சை- 1
- சீரக சம்பா- 1kg
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கிய காளான், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஊறவிடவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து அதில் அரைத்த கலவை மற்றும் ஊறவைவைத்த காளான் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் மல்லி தூள், பிரியாணி மசாலா, கரி மசாலா, மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
இறுதியாக இதில் கழுவி ஊறவைத்த அரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்தால் சுவாயனா காளான் தொன்னை பிரியாணி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |