கொட்டிய மழை! குளிர்ச்சியான சூழலால் பெரிய பாம்பு புற்றில் நடந்த ஒரு ஆச்சரியம்... வைரலாகும் புகைப்படம்
தமிழகத்தில் மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு பாம்பு புற்றுக்கு மேல் காளான்கள் முளைத்து மல்லிகை பூ போன்று காட்சியளிக்கும் ஆச்சரிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டு காளான்கள் முளைத்து வருகின்றது.
அதன்படி காட்பாடி தாராபடவேடு குறிச்சி நகர் பகுதியில் உள்ள பெரிய பாம்பு புற்றின் மேல் பகுதியில் காளான்கள் முளைத்து மல்லிகை பூ போன்று காட்சியளிக்கின்றது.
இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உள்ள நிலையில் அதன் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.