தத்தெடுத்து வளர்த்த மகளை இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்த இஸ்லாமிய தந்தை! ஏன் தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் தத்தெடுத்து வளர்த்து வந்த சிறுமியை, இஸ்லாமியர் தந்தை ஒருவர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்த சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் பூஜா. இவரின் பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாரதவிதமாக உயிரிழந்துவிட்டனர். இதனால் பூஜா செய்வதறியாமல் தவித்து நின்றுள்ளார்.
அப்போது இதைக் கண்டு அருகில் வசிக்கும் மஹபூப் மல்லி என்ற இஸ்லாமிய நபர், அந்த சிறுமியை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார். அதன் படி அவரை ஒரு சொந்த மகள் போன்று பாசமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 31-ஆம் திகதி பூஜாவுக்கு அவர் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டன.
இது குறித்து மஹபூப் கூறுகையில், நான் பூஜாவிற்கு அவள் மதத்தை சேர்ந்தவரையே திருமணம் செய்து வைப்பதை கடமையாக வைத்திருந்தேன். பூஜா கடந்த 10 ஆண்டுகளாக எங்களுடன் தான் இருக்கிறார்.
ஒரு முறை கூட அவரை இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்ற நானோ, என் குடும்பத்தை சேர்ந்தவர்களோ வற்புறுத்தவில்லை. அவரை கட்டாயப்படுத்த மதம் மாற்றுவது எங்கள் மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.