இந்த தமிழன் டி20 உலகக்கோப்பையில் விளையாடனும்! அது தான் கோஹ்லிக்கு நல்லது: இங்கிலாந்து முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பனேசர், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி, குறிப்பிட்ட இரண்டு ஸ்பின்னர்களை நிச்சயம் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் தான், பல வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடரில் இடத்தை வாங்கிக் கொடுக்கப்போகிறது என்று சொல்லலாம். ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் நடப்பதால் வெளிநாட்டு வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்.
அப்படி விளையாடினால் மட்டுமே அவர்களுக்கு இடம் கிடைக்கும். வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, இந்திய வீரர்களுக்கும் அதே நிலைமை தான்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பனேசர் கூறுகையில், இந்த ஐபிஎல் தொடர் என்பது சாஹலுக்கும், குல்தீப் யாதவிற்க்கும் வரவிருக்கும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க ஒரு விஷப்பரீட்சை போன்றது.
அதில் அவர்கள் சொதப்பினால் அவர்களது இடம் காலி. ஏனென்றால் கடந்த பல தொடர்களாகவே இருவரும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் சரியாக விளையாடாமல் இருப்பதே ஆகும். குறிப்பாக சாஹலின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
எனவேதான் இந்த ஐபிஎல் தொடர் இருவருக்கும் ஒரு விஷப் பரீட்சை என்று நான் கூறுகிறேன்.
ஒருவேளை இத்தொடரில் சிறப்பாக செயல்படாத பட்சத்தில் டி20 உலக கோப்பை அணியில் இருவரின் இடமும் கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும்.
ஒருவேளை நான் விராட்கோலி நிலைமையில் இருந்தால் என்னுடைய அணியில் ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் அஷ்வினையே தெரிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.