மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

United Kingdom
By Balamanuvelan May 04, 2022 06:10 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

பிரித்தானியக் குழந்தை ஒருத்தி போர்ச்சுகல்லில் மர்மமான முறையில் மாயமான வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து வழக்கு பரபரப்படைந்துள்ளது.

Leicestershireஐச் சேர்ந்த Kate மற்றும் Gerry McCann தம்பதியர், 2007ஆம் ஆண்டு, மே மாதம் 3ஆம் திகதி, தங்கள் குழந்தைகளான Madeleine McCann, இரட்டையர்களான Sean மற்றும் Amelieயுடன் போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார்கள்.

பிள்ளைகளை தாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் தூங்கவைத்துவிட்டு, அருகிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருந்தார்கள் பெற்றோர். அவர்கள் திரும்பி வந்தபோது, கட்டிலில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த Madeleine மாயமாகியிருந்தாள்.

அவளை அருகில் உள்ள இடங்களில் தேடியும் கிடைக்காததால் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Mysterious Case Of A British Child

நேற்றுடன், Madeleine காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆன நிலையிலும் அவள் என்ன ஆனாள் என்பது இதுவரையிலும் தெரியவேயில்லை...

இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், 2020ஆம் ஆண்டு, Christian Brueckner (45) என்ற நபர் மீது பொலிசாரின் கவனம் திரும்பியது.

அந்த நபர், ஏற்கனவே ஒரு பெண்மணி மற்றும் சிறுமியை வன்புணர்ந்தது, மற்றும் ஆபாசமாக நடந்துகொண்டது என சில வழக்குகளில் சிக்கி சிறையிலிருக்கிறார்.

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Mysterious Case Of A British Child

அவர் Madeleine காணாமல் போன அன்று, அவள் காணாமல் போன இடத்துக்கு அருகில் மொபைல் பயன்படுத்தியது தெரியவந்தது. ஆனால், தான் தனது வேனில் 18 வயது பெண் ஒருத்தியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்ததாக கூறினார் Brueckner.

வழக்கில் திடமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தற்போது ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் ஜேர்மன் அதிகாரியாகிய Hans Christian Wolters என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்குப் புதிய சில உண்மைகள் தெரியவந்துள்ளன என்று கூறியுள்ள Wolters, எங்களுக்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது, அது தடயவியல் ஆதாரம் அல்ல, உண்மையான ஆதாரம் என்று கூறியுள்ளார்.

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Mysterious Case Of A British Child

அது என்ன என்று அவர் கூறாவிட்டாலும், Madeleineஐ Brueckner தனது வேனில் கடத்திச் சென்ற அன்று, அவள் அணிந்திருந்த பைஜாமாவிலுள்ள நூலிழைகள் அந்த வேனிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

Madeleine கொல்லப்பட்டுவிட்டாள், அவளது கொலைக்கும் Bruecknerக்கும் தொடர்பு உள்ளது என Wolters உறுதியாகக் கூறி வரும் நிலையில், நேற்று தங்கள் மகள் காணாமல் போய் 15 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவளது பெற்றோரோ, இப்போது கிட்டத்தட்ட 19 வயதாகும் தங்கள் மகள், எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விடயம்.  

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Mysterious Case Of A British Child

மர்மமான முறையில் பிரித்தானியக் குழந்தை மாயமான வழக்கு: ஜேர்மன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Mysterious Case Of A British Child

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US