அமெரிக்காவில் மாயமான இந்திய இளைஞர்: கவலையை ஏற்படுத்தியுள்ள தகவல்
அமெரிக்காவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர் மாயமான நிலையில், அவரைக் குறித்த துயரச் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மாயமான இந்திய இளைஞர்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள Purdue பல்கலையில் கணினி அறிவியலில் பட்டப்படிப்பு படிக்கச் சென்ற மாணவர் நீல் ஆச்சார்யா (Neel Acharya).
ஜனவரி 28ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணியிலிருந்து அவரைக் காணவில்லை என்றும், அவரைக் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களுக்குத் தெரிவித்து உதவுமாறும் எக்ஸில் கோரியிருந்தார் நீலுடைய தாயாகிய கௌரி (Gaury Acharya).
கவலையை ஏற்படுத்தியுள்ள தகவல்
ஆனால், தற்போது நீல் தொடர்பில் கவலையை ஏற்படுத்தும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. Purdue பல்கலை வளாகத்திலேயே இளைஞர் ஒருவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
பின்னர், அது நீலுடைய உடல்தான் என அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீல் படித்த கணினி அறிவியல் துறையின் தலைவரான Chris Clifton, உயிரிழந்தது நீல் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த தகவல், மகனைக் காணாமல் வாடியிருந்த நீல் குடும்பத்தினரை மேலும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
Neel Acharya, the missing Purdue student, has been confirmed dead, according to an email from the interim head of the Department of Computer Science. A friend said, "He was a loving, caring, charismatic soul."https://t.co/3AO7QE3M0P
— Purdue Exponent (@purdueexponent) January 29, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |