பிரித்தானியாவில் 5 சிறுவர்கள் உட்பட 7 பேர்கள் படகுடன் மாயம்: நீடிக்கும் மர்மம்
பிரித்தானியாவில் ஐந்து குழந்தைகள் உட்பட 7 பேர்கள் பயணித்த மோட்டார் படகு ஒன்று காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் 6 மணிக்கு குறித்த படகானது பயணப்பட்டதாகவும், ஆனால் அதன் இலக்கை அடையவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஹெலிகொப்டர்களில் கடலோர காவல்படையினர் டோர்செட்டில் இருந்து இரண்டு மைல் பரப்பளவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதே வேளை படகுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் குறித்த படகு தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
குறித்த படகானது 5 சிறார்கள் உட்பட 7 பேர்களுடன் ஷெல் பே பகுதியில் இருந்து வெய்மவுத் பகுதிக்கு பயணப்பட்டதாக கூறப்படுகிறது.
24 அடி மோட்டார் படகு 7 பேர்களுடன் மாயமான சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.