பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய பெண்: நீடிக்கும் மர்மம்
பிரான்சில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானியப் பெண் வழக்கில், கொலையாளி இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரது மரணம் குறித்த மர்மம் நீடிக்கிறது.
பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு
ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
ஒரு வேடிக்கையான முக்கோணக் காதல்
இதற்கிடையில், கேரனுடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என கூறப்படுகிறது.
கேரன், திருமணமானவர். அவரது கணவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில், கேரன் பிரான்சில் வாழும் ஜீன் (Jean-François Guerrier, 75) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே மேரீ (Marie-Laure Autefort, 69) என்னும் பெண் ஜீனை கண்மூடித்தனமாக காதலித்துவந்துள்ளார். ஜீனோ அவரை விட கேரன் மீதுதான் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்.

ஆக, பொறாமையால் மேரீ கேரனைக் கொலை செய்துவிட்டாரா என்பதை அறிவதற்காக அவரை காவலில் எடுத்து 40 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள் பொலிசார்.
ஜீன்தான் கேரன் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்ததை முதலில் பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தவர். அவரையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்ளார்கள்.
அத்துடன், கேரன் வீட்டில் கட்டுமானப் பணிக்காக வந்த சிலரையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்தியுள்லார்கள்.
ஆனால், இவர்கள் யாரும் கேரனைக் கொலை செய்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆக, கேரனுடைய மரணம் மர்மமாகவே நீடிக்கிறது!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |