உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபார வெற்றி! தம்பிகள் உற்சாகம்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் தற்போது நடந்து வருகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்திலும் தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சி திமுகவே முந்துகிறது.
இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதன்படி கன்னியாக்குமரியில் உள்ள கப்பியறை பேரூராட்சி 1வது வார்டில் வேட்பாளர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஆன்சி சோபா வெற்றி பெற்றுள்ளார்.
இதே போல நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மேலும் பலர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் நேரலை வீடியோ