ஹெலிகாப்டர் விபத்து! அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் கைது
இந்திய இராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின், நீலகிரி மாவட்டம், குன்னூர் காட்டேரி மலைப்பாதையில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால், இதில் இருந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்
ஒருவர் மட்டும் பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில், இந்த ஹெலிகாப்டகர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த சம்பவத்தில், பிரதமர் மோடியை விமர்சனம் செய்து, சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர் பாலசுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.