கண்கலங்கிய நிலையில் தன் தந்தைக்கு வந்து சீமான் செலுத்திய அஞ்சலி! வெளியான புகைப்படம்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபல நடிகரும், இயக்குனரும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் அவர்களின் தந்தை இன்று மாலை காலமானார்.
இவர் சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்தார். செந்தமிழன் என்று அழைக்கப்படும் அவர், இன்று உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இவரின் மறைவுக்கு, வைக்கோ, டிடிவி தினகரன், இயக்குனர் பாரதிராஜா போன்றோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் தன் தந்தையின் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், அவர் தன் தந்தையை ஒரு வித ஏக்கத்துடன், கண்கலங்கிய படி பார்ப்போது போன்று உள்ளது.
மேலும், சீமானின் தந்தை மறைவுக்கு, சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.