மலரட்டும் ஊழலற்ற நல்லாட்சி! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீமான் வாக்களித்தார்... புகைப்படங்கள்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சீமான் தனது வாக்கை செலுத்தினார்.
இது குறித்த அவரின் டுவிட்டர் பதிவில் உள்ளாட்சியில் மலரட்டும் ஊழல்-இலஞ்சமற்ற நல்லாட்சி! #வெல்லட்டும்_விவசாயி என பதிவிட்டுள்ளார்.
உள்ளாட்சியில் மலரட்டும்
— சீமான் (@SeemanOfficial) February 19, 2022
ஊழல்-இலஞ்சமற்ற நல்லாட்சி!#வெல்லட்டும்_விவசாயி | #Vote4Vivasayi pic.twitter.com/CG8XRJYBgA
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.
அதே போல 95 வயதான முதியவர் ஒருவர் வீல் சேரில் வந்து வாக்களித்தார். பின்னர் அவர் பேசுகையில் ஜனநாயக கடமையை ஆற்றியதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.