நாம் தமிழர் கட்சி எப்போதும் இந்த விஷயத்தில் அரசுக்கு துணை நிற்கும்! சீமான் அதிரடி அறிவிப்பு
நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்தியாவில் நீட் தேர்வு காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில், இந்த நீட் தேர்வு பயம் காரணமாக, தற்கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இதனால், நீட் தேர்வை ரத்து செய்யகோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவர்களின் தொடர் தற்கொலை காரணமாக உள்ள நீட் தேர்வினை நீக்க, தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் அனைத்து ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கும் நாம் தமிழர் கட்சி உறுதியாக துணை நிற்கும் என்று கூறியுள்ளார்,.