பெற்ற பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீசிவிட்டு நிர்வாணமாக குதித்த தாய்! திடுக்கிட வைக்கும் சம்பவம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிஞ்சு பிள்ளைகள் இருவரை குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே வீசி, தாயார் ஒருவர் குதித்த சம்பவத்தில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிலேயே சனிக்கிழமை பகல் இச்சம்பவம் நடந்துள்ளது.
24 வயதான Dejhanay Jarrell என்ற இளம் தாயார் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் ஜன்னல் வழியாக தமது இரு பிள்ளைகளையும் வீசியுள்ளார்.
உடை ஏதும் இல்லாமல் பிள்ளைகள் தரையில் விழுந்த சில நொடிகளில், அவரும் நிர்வாணமாக வெளியே குதித்துள்ளார், பின்னர் தமது பிஞ்சு குழந்தையின் தலையை தரையில் மோதியபடி அலறியுள்ளார்.
இதனிடையே குழந்தைகளில் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த 41 வயதான Carl Chin என்பவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதுடன், அந்த இளம் தாயாரிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க் நகர பொலிசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த ஒரு குழந்தையை உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் தாயாரையும் இன்னொரு குழந்தையையும் காயங்களுடன் மீட்டு Brookdale மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் Dejhanay Jarrell மீது கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உளவியல் காரணங்களால் குறித்த இளம் தாயார் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும், விசாரணைக்கு பின்னரே உண்மை காரணம் வெளிவரும் என கூறப்படுகிறது.