என் மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்! தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு பரோல் கோரி அவர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவருடைய தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.