இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதி யார் தெரியுமா? கசிந்த முக்கிய தகவல்
இந்தியாவின் புதிய முப்படை தலைமை தளபதியாக இராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்த பிபின் ராவத், தன்னுடைய முப்படைகளுக்கான தலைமை தளபதி பதவியில் இருந்து வரும் 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஓய்வு பெறவிருந்தார்.
இந்நிலையில், இவரின் திடீர் மரணத்தால் அடுத்த முப்படை தளபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இராணுவ தளபதி எம்.என்.நரவனே முப்படை தளபதியாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ தளபதியான எம்.என்.நரவனே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருப்பவர் 65 வயது வரை பதவியில் நீடிக்கலாம்.
இதனால் தற்போதைய நிலையில் முப்படைகளின் தளபதிகளில் மூத்த அதிகாரியாக எம்.என்.நரவனே உள்ளாதால், இவரே முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதி நாட்டின் 27-வது இராணுவ தளபதியாக நரவனே பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இராணுவ துணை தளபதியாக இருந்த இவர், அதற்கு முன்பு சீனாவுடனான 4,000 கி.மீற்றர் எல்லை பகிர்வு உள்ள கிழக்கு பிராந்திய தளபதியாகவும் இருந்தார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகளை ஒழித்து கட்டுவதில் முனைப்புடன் பணியாற்றினார். இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் இவர் இடம்பெற்றிருந்தார்.
மேலும், இவரைத் தவிர ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியாவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.