இஸ்லாமிய இளைஞனை அரவணைத்த மோடி... காதில் சொன்னது என்ன? வைரலாகும் புகைப்படத்தின் முழு விபரம்
இந்திய பிரதமர் மோடி, பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பிய போது, அவரிடம் இஸ்லாமிய இளைஞர் காதில் ஏதோ பேசுவது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அது குறித்து அந்த இளைஞர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவின் மேற்கு வங்கம் மம்தா பானர்ஜியின் கோட்டையாக உள்ளது. அங்கு அவருக்கு இருக்கும் ஆதரவால் அந்த முதலமைச்சராக நீடித்து வருகிறார்.
இதனால் இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக மம்தா போராடி வருகிறார்.
இன்னொரு பக்கம் இந்த முறையாவது மேற்கு வங்கத்தை எட்டி பிடித்துவிட வேண்டும் என்று பாஜக காய் நகர்த்தி வருகிறது.
இதனால் மேற்கு வங்க அரசியல் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு மொத்தம் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த 2-ஆம் திகதி சோனாப்பூர் பகுதியில் பிரதமர் பிரச்சாரம் முடித்து கொண்டு, அங்கிருந்த ஹெலிகாப்டரில் புறப்பட சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திரண்டு வந்த கூட்டத்தில் இருந்து ஒரு இஸ்லாமிய இளைஞர் மோடியை நோக்கி சென்றார்.. தன்னை சந்திக்கவே அந்த இளைஞர் ஆவலுடன் வருவதை கவனிக்க, அதன் பின் பிரதமர் காதில் ஏதோ சொன்னார்.
உடனே அவரை அரவணைத்துக் கொண்ட பிரதமர் மோடி, அவர் சொல்வதை கூர்ந்து கேட்டார். அதன் பின் அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
இந்நிலையில், அந்த இளைஞர் இது குறித்து கூறுகையில், நான் ஒரு இஸ்லாமியர், என் பெயர் ஜுல்பிகர் அலி. கொல்கத்தாவை சேர்ந்தவன். 2014-லில் இருந்து பாஜகவில் இருக்கேன். தெற்கு கொல்கத்தா மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவராக பொறுப்பில் உள்ளேன்.
என் வாழ்க்கையில் ஒரு முறையாவது மோடியை சந்தித்துவிட வேண்டும் என்று கனவு இருந்தது.
அதுக்குதான் அன்னைக்கும் சோலாப்பூர் சென்று முயற்சித்தேன். மோடியுடன் பேசினேன். பிரதமர் என்னை அரவணைத்து, என் பேர் கேட்டார்.
உனக்கு என்ன வேணும் என்று கேட்டார். நான் உடனே எம்எல்ஏ, எம்பி சீட் எதுவும் வேணாம்.
உங்க கூட ஒரு புகைப்படம் எடுத்தால் போதும் என்று கேட்டேன். உடனே போட்டோகிராபரை கூப்பிட்டு என்னுடன் போட்டோ எடுத்து கொண்டதாக விளக்கம் அளித்தார்.