ஒவ்வொரு நாளும் வலிமையுடன் மீண்டு வருகிறேன்: தமிழன் நடராஜன்
காயத்தால் அவதிப்படும் தமிழக வீரர் நடராஜன் அதில் இருந்து மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் தனது யார்க்கர்கள் மூலம் அசத்தி யார்க்கர் நடராஜன் என்று பிரபலமடைந்த டி.நடராஜன், அவுஸ்திரேலியா தொடருக்கு இந்திய அணி சென்ற போது வலைப்பயிற்சி பவுலராகச் சென்று டி20, ஒருநாள், டெஸ்ட் என்று மூன்று சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் அறிமுகம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்த நிலையில் காயம் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை.
பின்னர் தன் சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கும் நடராஜன் 2021 ஐபிஎல் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.
ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே ஆடி முழங்கால் காயத்தினால் வில்கினார். தோள்பட்டைக் காயமும் இருந்ததால் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்திலிருந்து மீண்டு வர பயிற்சியில் ஈடுபட்டார்.
கடந்த மாதம் இவரது முழங்கால் காயத்துக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் தமிழன் நடராஜன், வீட்டிலிருந்த படியே உடல் புனரமைப்புப் பயிற்சி, உடற்தகுதி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து அவர் சமூகவலைதளத்தில், ஒவ்வொரு நாளும் வலிமையுடன் மீண்டு வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.