உடைகள் பறிக்கப்பட்டு... ரயில் தண்டவாளத்தில் இளம் கோகோ வீராங்கனையின் சடலம்
இந்திய மானிலம் உத்தரபிரதேசத்தில் கோ கோ தேசிய அணியின் வீராங்கனை ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீராங்கனையின் குடியிருப்புக்கும் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்திலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உடைகள் மொத்தமாக பறிக்கப்பட்டு, முகத்தில் காயங்களுடன் காணப்பட்டுள்ளார். மட்டுமின்றி, கழுத்தை நெரித்ததன் அடையாளங்களும் காணப்பட்டுள்ளது.
தங்கள் மகளை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளதாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் கோ கோ விளையாட்டில் உத்தரபிரதேசத்தின் முகமாக விளங்கியுள்ளார் கொல்லப்பட்ட 24 வயது விராங்கனை. அரசு பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராக சமீக நாட்களில் பணியாற்றியும் வந்துள்ளார்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது வேலையை இழந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கான நேர்முக தேர்வுக்கு சென்றவர் பின்னர் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து பெற்றோரும், கிராம மக்களும் ஒன்றிணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையில், ஆள் நடமாட்டமற்ற ரயில் தண்டவாளத்திற்கு அருகாமையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகாமையில் போதை மருந்து பயன்படுத்திய ஊசிகளும் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.