NSCயில் முதலீடு செய்தால் வருமான வரி விலக்குடன் லாபம்! 5 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?
அஞ்சல் சேமிப்பு திட்டமான NSCயில் முதலீடு செய்தால், வட்டியுடன் சேர்த்து 5 ஆண்டுகள் இறுதியில் எவ்வளவு பெறலாம் என்பது குறித்து இங்கே காணலாம்.
சிறந்த முதலீட்டு வாய்ப்பு
தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) என்பது குறைந்தபட்ச அபாயத்துடன் கூடிய சிறந்த முதலீட்டு வாய்ப்பு ஆகும்.
ஏனென்றால், இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்ட பிரிவு 80 Cயின் கீழ் வருமான வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் அதிகம் முதலீடு செய்யும் இடங்களில் ஒன்றாக அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் National Saving Certificate என்ற திட்டத்தை ஒரு வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ எளிதாக திறக்கலாம்.
சிறிய மற்றும் நடுத்தர வருவாய் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பது இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது.
பொது வருங்கால வைப்பு மற்றும் தபால் அலுவலக நீண்ட கால வைப்பு நிதிகள் போன்ற சில நிலையான வருமான கருவிகளைப் போல, தேசிய சேமிப்பு சான்றிதழ், உத்தரவாதமான வட்டி மற்றும் முழுமையான மூலதன பாதுகாப்பை வழங்குகிறது.
இருப்பினும் வரி சேமிப்பு, பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்புகள் போல், பணவீக்கத்தை மீறிய வருமானத்தை தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தால் வழங்க முடியாது.
முன்னதாக, அச்சிடப்பட்ட ஒரு பத்திரமாக, NSC சான்றிதழ்களை தபால் அலுவலகங்கள் வழங்கி வந்தன. இந்த நடைமுறையானது 2016ஆம் ஆண்டு முதல் மாற்றப்பட்டது.
சிறு தொகையை சேமிக்க
ஒருவரிடம், வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருக்கும் பட்சத்தில், இணைய வங்கியை பயன்படுத்தும் நடைமுறை மூலமாக, தேசிய சேமிப்பு சான்றிதழை, இணையம் மூலம் மின்னணு முறையில் வாங்கலாம்.
இது ஒருவர் தன்னுடைய பெயரிலோ அல்லது தன்னுடைய குழந்தைகள் பெயரிலோ வாங்க முடியும். சிறு தொகையை சேமிக்க நினைப்போருக்கு இத்திட்டம் கைகொடுக்கும். இந்த திட்டத்தில் நிலையான ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.
இது தற்போது ஆண்டுக்கு 7.7 சதவிதம் என்ற நிலையில் உள்ளது. ஆனாலும், இது மாற்றத்திற்கு உரியது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வருமான வரிச் சட்ட பிரிவு 80 Cயின் கீழ் ஆண்டுக்கு ரூ 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.
இதில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதலீடு செய்யப்படும் நிலையில், அதனை 80 Cயின் கீழ் கணக்கு காண்பித்து வருமான வரி சலுகையை பெற முடியும்.
குறைந்தபட்சம் 100 ரூபாய்
குறைந்தபட்சம் 100 ரூபாய் தொடங்கி அதிகபட்சம் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
NSC சான்றிதழ்களை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்படும் பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
இந்த திட்டம் கூட்டு வட்டி என்ற அடிப்படையில் செயல்படுகிறது. இதில் சம்பாதித்த வட்டி ஆண்டு தோறும் மறு முதலீடு செய்யப்பட்டு, முதிர்வு காலத்தில் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படும்.
NSC மூலம் கிடைக்கும் பணத்திற்கு டிடிஎஸ் இல்லாததால், சந்தாதாரர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, அதற்கு பொருந்தும் வரியை செலுத்த வேண்டும்.
நிதி விவரங்கள்
வட்டி வீதம் ஆண்டுக்கு 7.7 சதவிதம், காலாவதி 5 ஆண்டுகள், வரி விலக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை, அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. NSCஐ வங்கியில் அடமானமாக வைத்துப் பணம் பெறலாம்.
ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் என்ன கிடைக்கும்?
இந்த திட்டம் மூலம் ரூ.5,00,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.7 சதவித வட்டி விகிதத்துடன், 5 ஆண்டுகள் முடிவில் ரூ.7,24,513 பெறலாம். (இலாபம் ரூ.2,24,513)
ஏன் தேர்வு செய்யலாம்?
அரசின் முழுமையான நிதி பாதுகாப்பு இருப்பதால் சந்தை அபாயம் இல்லை. இதில் பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகள், நஷ்டங்கள் போன்றவை இல்லை. கடன் தேவைகளுக்கு உதவும், வங்கிகளில் அடமானம் வைத்துப் பணம் பெறலாம்.
எங்கே பெறலாம்?
அஞ்சல் அலுவலகங்கள் (Post Office), India Post website அல்லது இணையதளம் வழியாக பெறலாம். மத்திய அரசு அங்கீகரித்த ஒன்லைன் நிதி சேவைகள் மூலமாகவும் பெறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |