ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து தமிழக வீரர் நடராஜன் விலகல் என தகவல்! காரணம் என்ன?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழக வீரர் நடராஜன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனால் முதல் 2 ஆட்டத்தில் களம் இறங்கிய அவர் அதன் பிறகு விளையாடவில்லை.
இந்த நிலையில் ஐபிஎல்-ல் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகி இருப்பதாக ஐதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு தனது ‘யார்க்கர்’பந்து வீச்சின் மூலம் எதிரணியை மிரட்டியிருந்தார்.
ஆனால் இந்த ஐபிஎல் சீசன் நடராஜனுக்கு ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது.