வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்தித்து வருகின்றார்கள்.
சௌகரியத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு கிடையாது.
இதனை சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும். எனவே இவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும்.
அந்தவகையில் இந்தப்பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன?
- தவறான உணவுப்பழக்கங்கள்
- கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல்
- சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல்
- சுய இன்பம் பழக்கம்
- மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல்
- ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு
- உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல்
- கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை
- சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
-
மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
-
பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
-
நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
- கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வீட்டு வைத்தியம் உண்டா?
-
கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
-
உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம்.
- அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.