பெண்களே! கூந்தல் பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்
இன்றைய காலத்தில் பெண்களுக்கு கூந்தல் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது.
அத்தகைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் பல முறைகளை பின்பற்றுகிறார்கள். அதிலும் அழகு நிலையங்களுக்குச் சென்று நிறைய பணத்தை செலவழித்து கூந்தலை பராமரிக்கிறார்கள். இதனால் கூந்தல் உதிர்தல் குறையும். ஆனால் கூந்தல் வலுவிழந்து காணப்படும்.
மேலும் அவை நீண்ட நாட்கள் நிலைக்காது. மீண்டும் கூந்தல் உதிர்தலை ஏற்படுத்தும்.
எனவே இவற்றை எளியமுறையில் போக்க முடியும். தற்போது கூந்தல் பிரச்சினையை சரி செய்ய உதவும் ஒரு சூப்பரான வழி ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- செம்பருத்தி பூக்கள் – 30
- ஆலிவ் எண்ணெய் – கால் லிட்டர்
- தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர்
- வெந்தயம் – 5 டீஸ்பூன் அளவு
பயன்படுத்துவது எப்படி?
- முதலில் இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து சூடேற்றவும். அடுப்பு மிதமாக கொதிக்கட்டும். செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து நறுக்கவும்.
- கால் கைப்பிடி அளவு இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்க்கவும். மற்ற இதழ்களை அப்படியே எண்ணெயில் போட்டு, வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- எண்ணெய் குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தவும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெயை காய்ச்சலாம். தொடர்ந்து இந்த எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் விரல்களில் தொட்டு மயிர்க்கால்களில் தடவி வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து வந்தால் போதும்.
நன்மைகள்
- முடி இழப்பு உண்டாவது தவிர்க்கப்படுகிறது. முடியையும் வேர்க்கால்களையும் வலிமையாக்குகிறது.
- செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால்
இளநரையை வராமல் தடுக்க செய்கிறது.
- நரை பிரச்சனை தவிர்க்க உதவுகிறது. முடிக்கு அடர்த்தி கொடுக்கிறது. முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
- பொடுகு பிரச்சனை அதிகரிக்காமல் செய்கிறது.