நடிகைகளுக்கு பணத்தை இறைத்து உல்லாச வாழ்க்கை! பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (45). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.
தூத்துக்குடியில் மனைவி, குடும்பத்துடன் வசித்து வந்த முருகனுக்கும், பிரபல தாதா ஒயின்ஸ் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒயின்ஸ் சங்கருக்காக பல காரியங்களை முருகன் செய்துள்ளான்.
முருகன் நீராவி முருகன் ஆனது எப்படி?
அவனுடைய பெயரை தன்னுடைய மார்பில் முருகன் பச்சை குத்தி இருக்கிறான். இவனை ரவுடிகள் வட்டாரத்தில் அவனுடைய ஊர் பெயரை அடைமொழியாக வைத்து அழைத்ததால் 'நீராவி முருகன்' என்று பிரபலமானான்.
நீராவி முருகன் மீது 84 வழக்குகள் இருப்பதாக காவல்துறையில் கணக்கு உள்ளது. ஆனால் கணக்கில் வராத பல புகார்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
உல்லாச வாழ்க்கை
உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். துணை நடிகைகளுக்கு தண்ணீராக பணத்தை செலவழித்துள்ளான்.
அவர்களுக்கு அன்பளிப்பாக நகைகளையும் கொடுத்து அசத்தி இருக்கிறான் முருகன். குற்றச் செயல்களில் ஈடுப்பட்ட பிறகு தலைமறைவாக இருப்பதற்காகவென்றே நிரந்தரமாகவே சில ஆசைநாயகிகளை முருகன் வைத்து இருக்கிறான்.
என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
இந்த நிலையில் பொலிசில் சிக்காமல் தண்ணி காட்டி வந்த நீராவி முருகனை நாங்குநேரியில் திண்டுக்கல் தனிப்படை பொலிசார் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்துள்ளனர்.
முருகனை பிடித்தால் மொட்டை போடுவதாக தனிப்படை காவல்துறை டீமில் சிலர் முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி ஏட்டு விஜயகுமார் மற்றும் காவலர் புஷ்பராஜ் ஆகியோர் முருகன் பிடிப்பட்ட பிறகு மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்கள்.