ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வியுற நானே காரணம்! வெளிப்படையாக கூறிய வீரர்
பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோல்வியடைய நானே காரணம் என நேஹல் வதேரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோட்டைவிட்ட பஞ்சாப் கிங்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, முதல் முறையாக மகுடம் சூடி சாதனை படைத்தது.

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி
கடைசிவரை களத்தில் நின்று பஞ்சாப் வெற்றிக்காக போராடியவர் ஷஷாங்க் சிங். இவர் 30 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசினாலும், தோல்விக்கு பொறுப்பேற்று கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸின் மற்றொரு வீரரான நேஹல் வதேராவும் தோல்விக்கு நானே காரணம் என தெரிவித்துள்ளார்.
நானே காரணம்
அவர் கூறுகையில், "ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியின் தோல்விக்கு நானே காரணம். அன்று நான் மட்டும் சற்று நன்றாக விளையாடி இருந்தால் நாங்கள் கிண்ணத்தை கைப்பற்றியிருப்போம்.
முந்தைய போட்டிகளில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் சிறப்பாக ஆடினேன். இறுதிப் போட்டியில் மட்டும் நிலையாக நின்று போட்டியை முடிக்க முடியாமல் போய்விட்டது" என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள நேஹால் வதேரா 369 ஓட்டங்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |