பிரித்தானியாவில் மொடல் அழகிகளை ஆபாச வீடியோ எடுத்த பொலிஸ் அதிகாரி! அம்பலமான பித்தலாட்டம்..
பிரித்தானியாவில் புகைப்பட கலைஞர் என ஏமாற்றி மொடல் அழகிகளை அழைத்து வந்து, அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமான விடீயோக்களை படம்பிடித்த பொலிஸ் அதிகாரியின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
லண்டனில் துப்பறியும் ஆய்வாளராகவும், அதற்கு முன்பு பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர் நீல் கோர்பெல் (Neil Corbel).
40 வயதாகும் அவர், 'Harrison' என தனது பெயரை மாற்றிக்கொண்டு, தான் ஒரு விமானி என்றும் அத்துடன் ஒரு புகைப்பட கலைஞர் என்றும் ஏமாற்றி, பல மொடல் அழகிகளை தனது வீட்டிற்கும், ஆடம்பர ஹோட்டல் அறைகளுக்கும் வரவழைத்து போட்டோஷூட்களை நடத்தியுள்ளார்.
அனால், அங்கு வந்த பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை கோர்பெல் எடுத்துள்ளார்.
நீல் கோர்பெல், தனது பிளாட் மற்றும் வாடகைக்கு எடுக்கும் ஹோட்டல் அறைகளிலும், கடிகாரங்கள், மொபைல் சார்ஜர், கண்ணாடிகள், கார் சாவி என பல இடங்களில் மறைக்கப்பட்ட உளவு கமெராக்களை பொறுத்தியுள்ளார்.
போட்டோஷூட்க்கு வரும் பெண்களை, அவர்கள் குளிப்பது, உடைகளை மாற்றுவது என பல நேரங்களில் அந்த கமெராக்களை பயன்படுத்தி பல மணிநேர வீடியோக்களை எடுத்து வைத்துள்ளார்.
இவ்வாறு, கிரேட்டர் லண்டன், மான்செஸ்டர் மற்றும் பிரைட்டன் பகுதிகளில் உள்ள இடங்களில் ஜனவரி 2017 மற்றும் பிப்ரவரி இடையே இதுபோல் பெண்களை ஏமாற்றி படமெடுத்துள்ளார்.
சுமார் 51 பெண்களின் படங்களை அவரிடமிருந்து மீட்டுள்ளதாகவும், அதில் 19 அடையாள காணப்பட்டு, குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளுடன் ஒத்துழைப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒரு பெண் மற்றும் வீடியோ எடுக்க ஒப்புக்கொண்டு வந்துள்ளார், மற்ற பெண்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடைசியாக பெயர் குறிப்பிடப்படாத ஒரு மொடல் அழகி, அவர் போட்டோஷூட்டுக்காக வந்த அறையில் இருந்த கடிகாரத்தை உற்று பார்க்கும்போது, அதில் கமெரா இருந்ததை தெரிந்துகொண்டு, அவர் புகார் அளித்த பிறகே நீல் கோர்பெல் இத்தனை பேரை ஏமாற்றி வந்ததது தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, தற்போது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, தொழில்முறை தரநிலைகளின் இயக்குநரகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோர்பல், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, தான் பெண்களை ரகசியமாக படம்பிடித்ததாக குற்றங்களை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டார்.
தற்போது, நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார், ஆனால் அவருக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் போது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அவர் தண்டனை விசாரணைக்காக அக்டோபர் 4-ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வர உள்ளார்.
வழக்கு தொடர்பாக தடயவியல் உளவியலாளர் மற்றும் போதை நிபுணரின் மதிப்பீடுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.