பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!

France Paris Netherlands
By Ragavan Oct 29, 2024 04:33 PM GMT
Report

பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

அக்டோபர் 21 அன்று, சென்-சென்-டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள Robert Ballanger வைத்தியசாலையில் Aulnay-sous-Bois பிரிவில் இருந்த குழந்தையை அவரது பெற்றோர் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் முன்பாக பிறந்ததால் மருத்துவ சிகிச்சையில் இருந்தது.

prematurely-born baby kidnapped, paris, France, Netherlands, Amsterdam

நான்கு நாள் தேடல்

குழந்தை கடத்தப்பட்டதையடுத்து, பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஐரோப்பா முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில், அக்டோபர் 25 அன்று, சாந்தியாகோவையும் அவருடைய பெற்றோர் கிறிஸ்டினா (25) மற்றும் கேவின் (23) ஆகியோரை ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஹோட்டலில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சாந்தியாகோ மீண்டும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார நிலைமை முழுமையாக சீராகிய பிறகு, அவரை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

தந்தை, தாயின் நிலை

குழந்தையை கடத்தியதாகக் கூறப்படும் சாந்தியாகோவின் பெற்றோர் தற்போது நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விரைவில் பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர், அங்கு அவர்கள் இருவரும் குழந்தை கடத்தல் மற்றும் பராமரிப்பு மறுப்பு குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உரிமை மீறலா?

பெற்றோர்களின் வழக்கறிஞர், “சாந்தியாகோவின் தாய் மருத்துவ பராமரிப்பை மறுக்கவில்லை; குழந்தையை வேறு பிரிவில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படி நடந்தார்” எனக் கூறினார்.

பில்லியனர்களுக்கு வரி விதிக்கும் திட்டம்., பிரெஞ்சு கீழ் சபை ஒப்புதல்

பில்லியனர்களுக்கு வரி விதிக்கும் திட்டம்., பிரெஞ்சு கீழ் சபை ஒப்புதல்

பொது வழக்கறிஞர் கூறியதாவது: “பெற்றோர் குழந்தையை அனுமதி இல்லாமல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லுவது அவர்களின் பெற்றோர்மை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.”

குற்றச் சட்டத்தின் 227-ஆவது பிரிவின் அடிப்படையில், பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியில் எடுப்பது பராமரிப்பு மறுப்பு குற்றமாகும்.

மேலும், தாயின் போதைப்பழக்கம் காரணமாக குழந்தையை பராமரிப்பது சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

prematurely-born baby kidnapped, paris, France, Netherlands, Amsterdam

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US