பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!

France Paris Netherlands
By Ragavan Oct 29, 2024 04:33 PM GMT
Report

பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

2025 உலகின் பாதுகாப்பான நாடுகள்: முதலிடத்தில் இருந்து சரிந்த கனடா

அக்டோபர் 21 அன்று, சென்-சென்-டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள Robert Ballanger வைத்தியசாலையில் Aulnay-sous-Bois பிரிவில் இருந்த குழந்தையை அவரது பெற்றோர் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் முன்பாக பிறந்ததால் மருத்துவ சிகிச்சையில் இருந்தது.

prematurely-born baby kidnapped, paris, France, Netherlands, Amsterdam

நான்கு நாள் தேடல்

குழந்தை கடத்தப்பட்டதையடுத்து, பிரான்ஸ் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, ஐரோப்பா முழுவதும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில், அக்டோபர் 25 அன்று, சாந்தியாகோவையும் அவருடைய பெற்றோர் கிறிஸ்டினா (25) மற்றும் கேவின் (23) ஆகியோரை ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒரு ஹோட்டலில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

சாந்தியாகோ மீண்டும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார நிலைமை முழுமையாக சீராகிய பிறகு, அவரை பிரான்ஸுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

ஜேர்மனியில் வேலைவாய்ப்பு., அதிக தேவை இருக்கும் 15 தொழில்கள்

தந்தை, தாயின் நிலை

குழந்தையை கடத்தியதாகக் கூறப்படும் சாந்தியாகோவின் பெற்றோர் தற்போது நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் விரைவில் பிரான்சுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர், அங்கு அவர்கள் இருவரும் குழந்தை கடத்தல் மற்றும் பராமரிப்பு மறுப்பு குற்றச்சாட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

உரிமை மீறலா?

பெற்றோர்களின் வழக்கறிஞர், “சாந்தியாகோவின் தாய் மருத்துவ பராமரிப்பை மறுக்கவில்லை; குழந்தையை வேறு பிரிவில் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படி நடந்தார்” எனக் கூறினார்.

பில்லியனர்களுக்கு வரி விதிக்கும் திட்டம்., பிரெஞ்சு கீழ் சபை ஒப்புதல்

பில்லியனர்களுக்கு வரி விதிக்கும் திட்டம்., பிரெஞ்சு கீழ் சபை ஒப்புதல்

பொது வழக்கறிஞர் கூறியதாவது: “பெற்றோர் குழந்தையை அனுமதி இல்லாமல் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லுவது அவர்களின் பெற்றோர்மை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.”

குற்றச் சட்டத்தின் 227-ஆவது பிரிவின் அடிப்படையில், பெற்றோர் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியில் எடுப்பது பராமரிப்பு மறுப்பு குற்றமாகும்.

மேலும், தாயின் போதைப்பழக்கம் காரணமாக குழந்தையை பராமரிப்பது சந்தேகத்திற்கு உள்ளாக்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

prematurely-born baby kidnapped, paris, France, Netherlands, Amsterdam

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US