பிரித்தானிய மகாராணிக்கு ஒரு உயிரை பரிசளித்த இளவரசர் ஆண்ட்ரூ!
பிரித்தானிய ராணியின் 95-வது அதிகாரப்பூரவமான பிறந்தநாளை முன்னிட்டு, தனது தாயை மகிழ்விக்கும் விதமாக இளவரசர் ஆண்ட்ரூ ஒரு அழகிய நாய் குட்டியை பரிசாக கொடுத்துள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ தனது இரண்டு மகள்களுடன் இணைந்து, மறைந்த இளவரசர் பிலிப்பின் 100-வது பிறந்தநாளான வியாழக்கிழமையன்று இந்த நாய்க்குட்டியை பரிசாக கொடுத்துள்ளனர்.
பிறந்து ஆறு வாதங்களே ஆன பெயர் வைக்கப்படாத அந்த ஆண் குட்டி Pembroke Welsh Corgi இனத்தை சேர்ந்தது.
இதே போன்று ஒரு Corgi இன நாய்க்குட்டியை கடந்த பிப்ரவரி மாதம், இளவரசர் பிலிப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது மகள்கள் Beatrice (32) and Eugenie (31) ராணிக்கு பரிசாக கொடுத்திருந்தனர். அதற்கு Fergus என பெயர் வைக்கப்பட்து.
ஆனால், 5 மாதமே ஆன அந்த நாய்க்குட்டி கடந்த மாதம் புற்று நோயால் திடீரென இறந்தது.
ஏப்ரல் மாதம் தனது கணவர் இளவரசர் பிலிப் இறந்த சோகத்தில் இருந்த ராணிக்கு, Fergus-ன் இழப்பும் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது முகத்தில் சற்று சிரிப்பை காண அவரது மகன் இந்த அழகிய பரிசை கொடுத்துள்ளார்.