‘பிளான் பி’... உடனடியாக பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய கடுமையான கட்டுப்பாடுகள்! கசிந்த தகவல்
பிரித்தானியா அரசாங்கம் விரைவில் ‘பிளான் பி’ கட்டுப்பாடுகளை அமுல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘பிளான் பி’ அமுல்படுத்தும் திட்டத்தோடு இருப்பதாக இரண்டு மூத்த அரசாங்க வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பிளான் பி கட்டுப்பாடுகள் NHS மீதான தாங்க அழுத்தத்தை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பிளான் பி-யின் கீழ், வைரஸைக் கட்டுப்படுத்த உதவுவதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பொதுமக்களுக்கு ‘தெளிவாகவும் உடனடியாகவும்’ கூறப்படும்.
- சட்டப்பூர்வமாக கட்டாய முகக் கவச கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
- வீட்டில் இருந்து பணியை மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்.
- சில சூழ்நிலைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை கட்டாயமாக்கும் திட்டமும் அரசாங்கத்திடம் உள்ளது.
புதிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்னணி நிபுணர்கள் NHS திறன் குறித்து எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் ‘பிளான் பி’ அமுல்படுத்த உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்துவது தொடர்பில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.