சுவிஸ் நாட்டு பெண்கள் மீதும் கண் வைத்த எப்ஸ்டீன்: வெளியான ஆதாரங்கள்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.
சுவிஸ் நாட்டு பெண்கள் மீதும் கண்...
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர், அமெரிக்க கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர்.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு ஆவணங்களை வெளியிட்டுவருகிறது.
அவற்றில் இடம்பெற்றுள்ளதால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ, அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன், அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதர் பீற்றர் மாண்டல்சன் என பல பெரும் புள்ளிகள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்துக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிக், ஜெனீவா மற்றும் Verbier ஆகிய நகரங்களில் உள்ள சிலருடன் எப்ஸ்டீன் தொடர்ந்து தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.
சுவிஸ் இளம்பெண்களுக்கான வேலை பயிற்சிக்காக பணம், அவர்களுடைய விமான டிக்கெட், ஹொட்டலில் தங்குவதற்கான செலவு மற்றும் விசாவுக்காக பணம் என பல்வேறு உதவிகளை எப்ஸ்டீன் செய்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அவர் சுவிட்சர்லாந்துக்கு வந்த்போதெல்லாம், அவரிடம் பெண்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
என்றாலும், அவர்களில் எத்தனை பெண்கள் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |