சொன்ன வார்த்தையை காப்பாற்றாத காதல் கணவர்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலூரை அடுத்த அரிசி பெரியாங்குப்பத்தை சேர்ந்த பட்டதாரி பெண் ரம்யா(27). இவர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
காதல் கணவரின் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு, அங்கு கழிப்பறை வசதி இல்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கணவரிடம் கேட்டபோது வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறி சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால் ஒரு மாதமாகியும் வேறு வீட்டிற்கு அழைத்து செல்லாமலும், தனது வீட்டில் கழிப்பறை கட்டாமலும் கார்த்திகேயன் இருப்பது குறித்து ரம்யா கேள்வி கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரம்யா தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரம்யாவின் தாய் பொலிசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.