புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது.., கமல் ஹாசன் பேச்சு
புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
கமல் பேசியது
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் படத்திற்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மலேசியா செல்லவிருந்த நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தக்லைஃப் படம் நன்றாக இருக்கும் என்று தான் மக்கள் முன் விடுகிறோம். மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். அதற்கான ஆதாரங்களும் இருக்கிறது.
இப்போது கூட படத்தின் ப்ரோமோஷனுக்காக மலேசியா, துபாய் செல்ல உள்ளேன். இந்திய மாநிலங்களவையில் நம்முடைய குரல், மய்யத்தின் குரல் ஒலிக்க வேண்டும். அது தமிழக மக்களின் குரலாக இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், தமிழகத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, " நான் புதிய கட்சி தான், புதிய கட்சிகள் குறித்து விமர்சிக்கக் கூடாது" என்றார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |