பிரான்ஸ் செல்லும் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு
பிரான்ஸ் செல்லும் இந்தியர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளுடனான விமான போக்குவரத்தை ரத்து செய்து வருகின்றன.
பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையே விமானப் போக்குவரத்து குறித்து ஏற்கனவே ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் விமான போக்குவரத்து தொடர்ந்து செயல்படும்.
ஆனால், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ் வரும் இந்தியர்கள், தங்களை 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.