தமிழகத்தில் இரவு ஊடரங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உட்பட புதிய கட்டுப்பாடுகள் அமுல்!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்துப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் குறித்து தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் 6-1-2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி விரையிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும்.
இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.
எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
எதிர்வரும் 9-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்.
இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ATM மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 5, 2022
2/4 pic.twitter.com/V6969YoaZ3
பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் இன்னும் பல இதர கட்டுப்பாடுகளையும் தமிழக அரவு அமுல்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 5, 2022
4/4 pic.twitter.com/WhST8Wxtf3