கிரிக்கெட் விதிகளில் முக்கிய மாற்றம் - இனி இந்த மாதிரி கேட்ச் பிடித்தால் சிக்ஸர்
கிரிக்கெட்டில் கேட்ச் பிடிப்பது தொடர்பான விதிகளில் ஐசிசி முக்கிய மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
துடுப்பாட்டக்காரர் சிக்ஸர் அடிக்க முயலும் போது, எல்லைக்கோட்டின் அருகே பந்தை கேட்ச் செய்ய முயலும் பீல்டர், எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று விடுவோம் என நினைத்து பந்தை பிடித்தவுடன் களத்திற்குள் வீசிவிட்டு, மறுபடியும் உள்ளே வந்து பிடிப்பார்கள்.
A fantastic piece of fielding 👏
— England Cricket (@englandcricket) July 9, 2021
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
இது Bunny Hop வகை கேட்ச் என அழைக்கப்படும். இந்த வகையான கேட்ச் தற்போது கிரிக்கெட்டில் அதிகளவில் இடம்பெறுகிறது.
Bunny Hop கேட்ச்
சில வீரர்கள் பலமுறை பந்தை களத்திற்குள் வீசி விட்டு, எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்று மீண்டும் வந்து பிடிப்பதுண்டு. இந்த கேட்ச்சில் தற்போது ஐசிசி புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, கேட்ச் பிடிக்கும் வீரர் பந்தை ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வீசிவிட்டு எல்லைக்கோட்டிற்குள் செல்லலாம். 2வது முறை அவ்வாறு செய்தால், அது சிக்ஸராக கருதப்படும்.
அதே போல், கேட்ச் பிடித்து மற்றொரு பீல்டரிடம் பந்தை தூக்கி வீசிவிட்டு எல்லை கோட்டிற்கு வெளியே செல்வதுண்டு.
புதிய விதிப்படி, மற்றொரு பீல்டர் கையில் பந்தை பிடிக்கும் போது, அதை வீசியவர் எல்லைக்கோட்டிற்கு உள்ளே இருக்க வேண்டும். இல்லையென்றால் சிக்ஸராக கருதப்படும். இந்த புதிய விதி 2026 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |