வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல் சின்னம்- வானிலை மையம் தகவல்
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருகிற 22ஆம் திகதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரை பகுதிகள் அருகே வரும் ஜூலை 24ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |