இந்திய மாறுபாடு அதிகரிக்கும் நிலையில் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு
பிரித்தானியாவில் இந்திய மாறுபாடு காரணமாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், புதிதாக தாய்லாந்து மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிரித்தானியா முழுக்க இதுவரை 100கும் அதிகமானோருக்கு தாய்லாந்து மாறுபாடு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் இருந்து தாய்லாந்துக்கு திரும்பிய பயணிகளால் முதன் முதலில் இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது.
பிரித்தானியாவில் மே 24 முதல் தாய்லாந்து மாறுபாடு தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதுவரையான விசாரணையில், தாய்லாந்து மாறுபாடு காரணமாக தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், தற்போதுள்ள தடுப்பூசிகளே தாய்லாந்து மாறுபாட்டிற்கும் போதுமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், நாட்டின் எந்த பகுதியில் அதிகமாக தாய்லாந்து மாறுபாடு கண்டறியப்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர்.
இருப்பினும், புதிய மாறுபாடு தொடர்பில் நிபுணர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்திய மாறுபாடு மிக விரைவாக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கணிக்க தவறியது முதன்மை காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தாய்லாந்தை பொறுத்தமட்டில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் ஒன்றாகும். இதுவரை தாய்லாந்தில் 873 பேர் மட்டுமே கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மேலும் மே 17ம் திகதி அங்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருந்தாலும், அதில் அதிகமும் சிறைவாசிகள் என தெரிய வந்துள்ளது.
திங்கள்கிழமை பதிவான பாதிப்பு எண்ணிக்கை 9,635ல் 6,853 பேர்கள் சிறைவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.