இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழையுங்கள்... பிரித்தானியாவின் புதிய சுகாதாரச் செயலர் உத்தரவு
*பிரித்தானிய மருத்துவமனைகளில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக பிரித்தானியாவின் புதிய சுகாதாரச் செயலரின் திட்டம்.
*இந்தியா இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பணியாளர்களை வரவழைக்க உத்தரவு
இந்தியா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து சுகாதாரத்துறைப் பணியாளர்களை உடனடியாக வரவழைக்குமாறு பிரித்தானியாவின் புதிய புதிய சுகாதாரச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் புதிய சுகாதாரத்துறைச் செயலராக பொறுப்பேற்றுள்ள Steve Barclay, வெளிநாட்டிலிருந்து சுகாதாரத்துறைக்கு பணியாளர்களை பணிக்கு தேர்ந்தெடுப்பதற்காக வேகமாக பணியாற்றுமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்தியா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பணியாளர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக Mr Barclay தெரிவித்துள்ளார்.
Image - nursingnotes
மேலும், செவிலியர் பணிக்கு வருவோர் அதற்கான கல்வி கற்றிருக்கவேண்டும் என்பது கட்டாயமேயொழிய, உயர் தர ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் Mr Barclay தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆங்கில மொழி விதிகளை முடிவு செய்வது அரசு மருத்துவ அமைப்போ அல்லது பணி வழங்குபவர்களோ அல்ல, செவிலியர் மற்றும் தாய் சேய் நலப் பணியாளர்கள் கவுன்சில் (Nursing and Midwifery Council) என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லது.