புதிதாக உருவாகியுள்ள கொரோனா மாறுபாடு குறித்து பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருவாகியுள்ள புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசிகளைத் தவிர்ப்பதற்கு 'அதிக சாத்தியம்' இருக்கலாம் என பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நீல் பெர்குசனே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடு உருவாகியுள்ளது, இது டெல்டா மாறுபாட்டை விட அதிகமாக பரவும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த மாறுபாடு spike protein மரபணுவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.
எனவே இந்த மாறுபாடு முந்தைய வகைகளை விட விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க அதிக ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடும் என்ற கவலை உள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாடுகளில் தொற்று எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதற்கு இந்த மாறுபாடு காரணமாக இருக்கலாம்.
தென் ஆப்பிரிக்காவுடனான போக்குவரத்தை கட்டுப்படுத்த பிரித்தானியா அரசு எடுத்துள்ள முடிவு விவேகமானது என பேராசிரியர் நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.