வெங்காயத்தின் உருவில் மீண்டும் பேராபத்து.. அமெரிக்காவில் பரவும் புதிய வைரஸ் தொற்று! வெளியான பகீர் தகவல்
அமெரிக்காவில் வெங்காயத்தில் இருந்து புதிய வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள 37 மாகாணங்களில் சுமார் 650 மக்கள் புதிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் தொற்றுக்கு salmonella என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள சிவாவாலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தில் இருந்து தான் இந்த கொடிய வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் முழு சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் வெங்காயத்தினை மக்கள் பயன்படுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நோய் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், பச்சை வெங்காயம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டவர்கள் தான் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
சுமார் 75% மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது வரை எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது.
salmonella நோய் தொற்று முதலில் குடலை பதித்து இரைப்பை நோய்களுக்கு வழி வகுக்கிறது. இதனால் Typhoid காய்ச்சல் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் மனித குடல்களில் வாழ்கிறது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல், வயிற்று பிடிப்புகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொற்று ஆறு மணி நேரத்தில் தொடங்கி 4 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும்.