புலம்பெயர்தலுக்கு எதிராக பிரித்தானியாவில் அறிமுகமாகும் புதிய விசா விதி
சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கையைத் குறைக்கும் முயற்சியில் முன்பு ஈடுபட்டிருந்த பிரித்தானிய அரசு, தற்போது, சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகமாகவுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் கடந்த டிசம்பரில் அறிவிப்புகள் வெளியிட்டிருந்தார்கள்.
இந்த வாரம் அறிமுகமாகியுள்ள புதிய விதி
நேற்று, அதாவது, மார்ச் மாதம் 11ஆம் திகதி, முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணி செய்யும் வெளிநாட்டவர்கள் (care workers), தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, தடை அமுலுக்கு வந்துள்ளது.
மேலும், ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல், திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.
அத்துடன், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர உள்ளதுடன், அது படிப்படியாக 38,700 பவுண்டுகள் வரை அதிகரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |