நியூயார்க்கில் கருப்பின மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 10 பேர் வரை உயிரிழப்பு!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பேட்டன் ஜென்ட்ரான்(18) என்ற நபர் நடத்திய இனவெறுப்பு தாக்குதலில் 10 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் மாகாணத்தில் கருப்பு இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான Buffalo நகரில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த பேட்டன் ஜென்ட்ரான்(18) என்ற வெள்ளையர் நடத்திய தாக்குதலில் இதுவரை 10 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Buffalo நகரில் உள்ள சூப்பர் மார்கெட் பகுதிக்குள் நுழைந்த பேட்டன் ஜென்ட்ரான்(18) தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு கருப்பின மக்களை குறிவைத்து சரமாறியாக சுடத்தொடங்கியுள்ளார், இதில் 13 பேர் வரை குண்டடிப்பட்ட நிலையில் அதில் 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
அவரை தடுக்க முயன்ற முன்னாள் காவல்துறை அதிகாரியான சூப்பர் மார்கெட் பாதுகாவலரையும் பேட்டன் ஜென்ட்ரான் சுட்டுக்கொன்றுள்ளார். சனிக்கிழமையான நேற்று நடைப்பெற்ற இந்த தாக்குதலை குற்றவாளி தன்னிடம் இருந்த கேமரா மூலம் அவரது இணையதளப் பக்கத்தில் நேரலையில் பகிர்ந்ததாகவும், இந்த தாக்குதல் சம்பவத்தின் போதும் இன அவதூறு வாக்கியங்களை சத்தமாக முழக்கமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், அவரை அதிரடியாக கைது செய்து வெறுப்பு குற்றம் மற்றும் இனரீதியான தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதம் ஆகிய பிரிவுகளின் கிழ் விசாரணை நடத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வன்முறை சம்பவம் குறித்து பேசியுள்ள நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், அப்பாவி சமூகத்தின் மீது வெறுப்பு தாக்குதலை நடத்திய இந்த வெள்ளை மேலாதிக்கவாதி, தனது எஞ்சிய நாட்களை சிறையில் கழிப்பார் என உண்மையாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், இந்த வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிராத்தனை செய்வதாக தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்றில் ஒருபங்கு ரஷ்ய ராணுவம் தற்போது இல்லை: பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
மேலும் அமெரிக்காவில் இனவெறுப்பு காரணமாக நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் வெறுக்கத்தக்கது என்றும், இதுப்போன்ற உள்நாட்டு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவோம் எனவும் தெரிவித்துள்ளார்.