2022 வரை நியூயார்க்கில் அவரசர நிலை பிரகடனம்!
அமெரிக்காவின் நியூயார்க்கில் அம்மாநில கவர்னர் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார்.
மாநிலத்தில் புதிய கொரோனா தொற்றுகள் மற்றும் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாதால் நியூயார்க் கவர்னர் Kathy Hochul அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான அரசாணையில், ஏப்ரல் 2020 முதல் மாநிலம் காணாத விகிதத்தில், நியூயார்க்கில் இப்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
அதேசமயம், புதிதாக கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 300 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், ஜனவரி 15, 2022 வரை நியூயார்க் மாநிலம் முழுவதற்கும் அவசரநிலையை நான் அறிவிக்கிறேன் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிலை, நியூயார்க்கில் மருத்துவமனை திறனை அதிகரிக்கும் மற்றும் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்க தடுப்பூசி விநியோகத்தை ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய Omicron கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் Hochul அவசரகால நிலையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.