திருமணமான புதுமணப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மாப்பிள்ளை தப்பியோட்டம்
தமிழக மாவட்ட நாகையில் புதுமணப்பெண்ணை மோசமாக துன்புறுத்திய மாப்பிள்ளையை பொலிசார் தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த நாகராஜன்-பரமேஸ்வரி தம்பதியின் மகள் நளினி(26). இவருக்கும் நாகையை சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில், கடந்த 27ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டில் திருமணம் முதலிரவு நடந்துள்ளது. அப்போது புதுமணப்பெண் நளினியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன உறவினர்கள் முதலிரவு அறைக்கு சென்று பார்த்தபோது, மாப்பிள்ளை அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மணமகள் நளினி உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்துள்ளார். அவரிடம் விசாரித்தபோது ராஜ்குமார் இயற்கைக்கு மாறாக உறவுகொண்டு துன்றுத்தியதாகவும், மனநலம் பாதித்தவரை போல் அவர் நடந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பொலிசில் புகார் அளித்தனர்.
காயமடைந்த புதுமணப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய ராஜ்குமாரை பொலிசார் தேடி வருகின்றனர்.