திருமணம் முடிந்த கையோடு வெளிநாட்டிற்கு கணவனுடன் சென்ற மனைவிக்கு நடந்த கொடுமை! காப்பாற்றி கொள்ள பொலிசை அழைத்த பரிதாபம்
இந்தியாவில் திருமணம் செய்து அமெரிக்காவிற்கு பல கனவுகளுடன், கணவனுடன் சென்ற மனைவி இப்போது பெரும் துயரத்தை சந்தித்து வருவதாக புகார் அளித்துள்ளார்.
இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த அனாமிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் முடிந்த கையோடு, கடந்த மார்ச் மாதம் கணவருடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவிற்கு சென்ற பின், கணவரின் செயல்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளது. வரதட்சனைக் கேட்டு அந்த பெண்ணை கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் உதவிக்காக அமெரிக்க வெளியுறவுத் துறையை அணுகியுள்ளார்.
ஆனால் இதுவரை எந்த பயனும் இல்லை. இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கும், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் San Francisco-வில் உள்ள துணைத் தூதரகம் போன்றவற்றிற்கு அவர் அனுப்பியுள்ள புகாரில், என் கணவர் நிதி உதவி இல்லாமல் என்னை கைவிட்டுவிட்டார்.
நான் செல்ல இடமில்லை. இந்தியாவில் என் பெற்றோர், மாமனாரிடம் உதவி கோரினார்கள், ஆனால் அவரும் இந்த பிரச்சனைக்கு வரதட்சனை கேட்கிறார். நாங்கள் வாஷிங்டனில் உள்ள மெக்லீனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தோம்.
ஒரு கட்டத்தில் கணவரின் தொந்தரவு அதிகமானதால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், நான் பொலிசாரை அழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின் பொலிசாரின் உதவியால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். கணவர் மிது பொலிசார் புகார் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர் நான் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் திகதி அன்று என் கணவருடன் ஐக்கிய அமெரிக்காவை அடைந்தேன். அமெரிக்கா வந்ததும், கணவர் என் மீது குடும்ப வன்முறையைத் தொடங்கினார்.
என் பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். மேலும், அவர் நான் கர்ப்பத்தை தடுக்க பார்க்கிறேனா என்பதற்காக, கழிப்பறைக்கு சென்றால், அங்கு வந்து பார்ப்பது, அதுமட்டுமின்றி மிகவும் மோசமாக கர்ப்பத்தை தடுத்துவிடுவேன் என்பதற்காக கையுறைகளை அணிந்து தன்னுடைய அ*** உறுப்பை சரிபார்ப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் PTI-க்கு வேதனையுடன் கூறியுள்ளார்.
இது குறித்து கேட்பதற்காக அந்த செய்தி நிறுவனம் அவரை அணுகிய போது, அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணின் கணவர் எப் 1 விசா மூலம் அங்கு மாணவராகவே இருப்பதாக கூறப்பட்டதால், அது குறித்த கேட்ட போது, அவர் தொலைப்பேசியை துண்டித்துவுட்டதாக குறிப்பிட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் வரதட்சனை கொடுமையால் தவிக்கும் அந்த பெண்ணை, இந்திய அரசு தான் உதவ வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.